Archive for the ‘இயற்கை உணவு விளக்கம்’ Category

நமது இயற்கை பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் முதல் பொருள் – நளன் மா !

எல்லாம் வல்ல இறைவனுக்கும், நம் குருநாதருக்கும் நன்றியையும் அன்பையும் தெரிவித்து இப்பதிவை பகிர்ந்து கொள்கிறோம். குழந்தைகளும் வீட்டில் உள்ள அனைவரும் நொறுக்கு தீனி (Snacks) என்ற பெயரில் செயற்கை சுவையுட்டிகள் , செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் திண்பண்ட பொருட்களையே அதிகம் சாப்பிடுகின்றனர். இதற்கு மாற்றாக நம் பாரம்பரிய உணவு வகைகளில் இயற்கையான திண்பண்டம் இருக்கிறதா என்று பல பேர் கேட்டிருந்தனர் இவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு.

நளன் தேவாமிர்தம் என்று ஏட்டு குறிப்பில் உள்ள ஒரு உணவுப்பண்டத்தை நம் மக்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைத்து நம் நட்பு வட்டங்களில் உள்ள மக்களிடம் நூலில் உள்ள முறையைப்பற்றி கூறினோம். சிலர் முயற்சித்து பார்த்து பரவாயில்லை என்றனர். சிலர் நன்றாக இருக்கிறது என்றும் கூறினார்கள். இதன் உண்மை தன்மையை கண்டுபிடிக்க நூலில் உள்ள எந்த முறையும் மாறாமல் அப்படியே இந்த உணவுப்பண்டத்தை உருவாக்கி பார்த்தோம் ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை. ஒவ்வொரு முயற்சியிலும் ஒவ்வொன்றை கற்றுக்கொண்டோம் இறுதியாக திண்பண்டத்தை இறைவன் அருளால் முழுமையாக சிறப்பாக உருவாக்கி நம் மக்களிடம் கொடுத்து கருத்து கேட்டோம். ஒருவர் மட்டுமல்லாமல் சாப்பிட்ட அனைவரும் சொன்ன ஒரே பதில் மிகவும் நன்றாக இருக்கிறது என்பது தான். நளன் தேவாமிர்தம் என்ற நூலில், இந்த திண்பண்டத்தைப் பற்றி தெரியப்படுத்திய சில அற்புதமான மற்றும் ஆச்சர்யமான தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். இத்திண்பண்டம் செய்ய தேவையான பொருட்கள் Continue reading

உடல் எடையை குறைக்கும் உன்னதமான மருந்து – பாகம் 1

உடல் எடையை குறைப்பது எப்படி ? என்று ஆயிரக்கணக்கான இமெயில்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றது. இப்படி சாப்பிட்டால் உடல் குறையுமா அல்லது இந்த முறைப்படி சாப்பிடலாமா என்று பல கேள்விகள். உங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் சித்தர்கள் கையாண்ட ஒரு சூட்சம முறையைப்பற்றி பார்க்கலாம். ஒரே பொருள் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் பயன்படும் ஆச்சர்யமாக இருக்கிறதா பயன்படுத்திப்பார்த்தால் தான் அதில் இருக்கும் உண்மை Continue reading

கேன்சர் (Cancer) நோய்க்கு எளிய மருந்து ரெடி !

cancer

மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விடயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம் அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும். Continue reading

இயற்கை உணவு உலகம் புத்தகம் வாங்குவது எப்படி ?

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் முதல் இயற்கை உணவு உலகம் பாகம் 1
புத்தகத்தை இறைவன் அருளால் வெளியீட்டுள்ளோம்.

இயற்கை உணவு உலகம் புத்தகம்

நம் முதல் புத்தகத்தில் வெளிவந்திருக்கும் தகவல்கள். Continue reading

சித்தர்கள் அரிய பல சித்தமருந்துகளை மறைப்பதன் உண்மையான காரணம்.

சில மாதங்களுக்கு முன்னர் இயற்கை உணவு உலகத்தின் வாசகர் ஒருவர்  பின்னோட்டத்தில் ஒரு கேள்வி எழுதி இருந்தார். அவர் அனுப்பிய செய்தி  பின்வருமாறு.
// தயவு செய்து மருந்துகளையும் உங்கள் வலைப் பதிவிலேயே தெரிவியுங்கள்
நீங்கள் நீரிழிவு நோய்க்கு கூறிய மருந்தை நான் பல பேருக்கு சொல்லி
மின்னஞ்சல் மூலமாக தெரிவித்ததன் காரணமாக பல பேர் இன்று
பயனடைந்திருக்கிறார்கள். இதை வைத்து பிழைக்க நினைக்கும் சில
அற்பர்களுக்காக பல பேருக்கு போய்ச் சேர வேண்டிய கருத்தை
மறைக்காதீர்கள் இப்படி மறைத்து மறைத்துத்தான் பல இயற்கை மருந்துகள்
தெரியாமலே போய் விட்டன. //

அன்பருக்கு தாங்கள் முதலில் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த மருந்தை கண்டுபிடித்தது நாம் அல்ல , ஏற்கனவே சித்தர்கள்  கண்டுபிடித்து எழுதி வைத்ததைத்தான் நாம் சொல்கிறோம்.நமக்கு பரிபாசையில் இருக்கும் மருந்தை புரிய வைத்த எம் குருநாதர் அகத்தியர் சொல்லும் அத்தனை நிபந்தனைகளுக்கும் நாம்  கட்டுப்பட்டவராகத்தான் இருக்க முடியும். குருநாதர் நூலில் தெரிவித்ததை அப்படியே தெரிவிக்கிறோம். Continue reading