எல்லாம் வல்ல இறைவனுக்கும், நம் குருநாதருக்கும் நன்றியையும் அன்பையும் தெரிவித்து இப்பதிவை பகிர்ந்து கொள்கிறோம். குழந்தைகளும் வீட்டில் உள்ள அனைவரும் நொறுக்கு தீனி (Snacks) என்ற பெயரில் செயற்கை சுவையுட்டிகள் , செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் திண்பண்ட பொருட்களையே அதிகம் சாப்பிடுகின்றனர். இதற்கு மாற்றாக நம் பாரம்பரிய உணவு வகைகளில் இயற்கையான திண்பண்டம் இருக்கிறதா என்று பல பேர் கேட்டிருந்தனர் இவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு.
நளன் தேவாமிர்தம் என்று ஏட்டு குறிப்பில் உள்ள ஒரு உணவுப்பண்டத்தை நம் மக்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைத்து நம் நட்பு வட்டங்களில் உள்ள மக்களிடம் நூலில் உள்ள முறையைப்பற்றி கூறினோம். சிலர் முயற்சித்து பார்த்து பரவாயில்லை என்றனர். சிலர் நன்றாக இருக்கிறது என்றும் கூறினார்கள். இதன் உண்மை தன்மையை கண்டுபிடிக்க நூலில் உள்ள எந்த முறையும் மாறாமல் அப்படியே இந்த உணவுப்பண்டத்தை உருவாக்கி பார்த்தோம் ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை. ஒவ்வொரு முயற்சியிலும் ஒவ்வொன்றை கற்றுக்கொண்டோம் இறுதியாக திண்பண்டத்தை இறைவன் அருளால் முழுமையாக சிறப்பாக உருவாக்கி நம் மக்களிடம் கொடுத்து கருத்து கேட்டோம். ஒருவர் மட்டுமல்லாமல் சாப்பிட்ட அனைவரும் சொன்ன ஒரே பதில் மிகவும் நன்றாக இருக்கிறது என்பது தான். நளன் தேவாமிர்தம் என்ற நூலில், இந்த திண்பண்டத்தைப் பற்றி தெரியப்படுத்திய சில அற்புதமான மற்றும் ஆச்சர்யமான தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். இத்திண்பண்டம் செய்ய தேவையான பொருட்கள் Continue reading