வாய்ப்புண் முதல் வாய் கேன்சர் ( Mouth Cancer ) வரை அனைத்தையும் குணப்படுத்தும் அற்புத மருந்து !

அன்பே வடிவான விநாயகப்பெருமானுக்கும் நம் குருநாதருக்கும் வணக்கம் , பல் ஈறுகளில் இருந்து ரத்தம் வருகிறது , நாக்கில் புண் ஆறவே இல்லை, வாயில் வரும் அரணைக்கட்டி எல்லாவற்றிற்கும் மேலாக வாயில் வரும் கேன்சர் நோய்க்கு அருமருந்தாக இருக்கும் ஒரு அற்புத மூலிகையைப் பற்றி தான் இந்தப்பதிவு.

6 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் உள்ள நம் வலைப்பூவின் வாசகர் ஒருவர் தன் மாமியாருக்கு வாயில் கேன்சர் முற்றிய நிலையில் இருக்கிறது மருத்துவரே இவரின் வயது மற்றும் கடைசி நிலை கேன்சர் என்பதால் இதற்கு மேல் கொடுப்பதற்கு மருந்து இல்லை என்று தெரியப்படுத்தியதால் இவருக்கு ஏதேனும் மருந்து உள்ளதா என்று கேட்டிருந்தார் நாமும் வெள்ளை சொட்டு மருந்து மற்றும் சில மருந்துகளை கொடுத்தோம் ஆனால் நோயின் தாக்கம் குறைந்ததே தவிர நோய் முழுமையான குணம் கிடைக்கவில்லை. ஒருசமயம் அந்த வயதான அம்மாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது அவரால் பேசமுடியவில்லை சைகையிலே இப்போது பரவாயில்லை வலி நன்றாக குறைந்திருக்கிறது என்றும் இரண்டு கைகளையும் கூப்பி தம் நன்றியை தெரியப்படுத்தினார். சில மாதங்கள் கழித்து அவரும் இயற்கை ஏய்தினார். நம்பியவர்களுக்கு உதவாத இம்மருத்துவ சேவை இனி நமக்கு தேவையில்லை என்று சில காலம் விலகியே தொடர்ந்து படிக்கவும்.

நமது இயற்கை பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் முதல் பொருள் – நளன் மா !

எல்லாம் வல்ல இறைவனுக்கும், நம் குருநாதருக்கும் நன்றியையும் அன்பையும் தெரிவித்து இப்பதிவை பகிர்ந்து கொள்கிறோம். குழந்தைகளும் வீட்டில் உள்ள அனைவரும் நொறுக்கு தீனி (Snacks) என்ற பெயரில் செயற்கை சுவையுட்டிகள் , செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் திண்பண்ட பொருட்களையே அதிகம் சாப்பிடுகின்றனர். இதற்கு மாற்றாக நம் பாரம்பரிய உணவு வகைகளில் இயற்கையான திண்பண்டம் இருக்கிறதா என்று பல பேர் கேட்டிருந்தனர் இவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு.

நளன் தேவாமிர்தம் என்று ஏட்டு குறிப்பில் உள்ள ஒரு உணவுப்பண்டத்தை நம் மக்களுக்கு தெரியப்படுத்தலாம் என்று நினைத்து நம் நட்பு வட்டங்களில் உள்ள மக்களிடம் நூலில் உள்ள முறையைப்பற்றி கூறினோம். சிலர் முயற்சித்து பார்த்து பரவாயில்லை என்றனர். சிலர் நன்றாக இருக்கிறது என்றும் கூறினார்கள். இதன் உண்மை தன்மையை கண்டுபிடிக்க நூலில் உள்ள எந்த முறையும் மாறாமல் அப்படியே இந்த உணவுப்பண்டத்தை உருவாக்கி பார்த்தோம் ஒரு முறை இருமுறை அல்ல பலமுறை. ஒவ்வொரு முயற்சியிலும் ஒவ்வொன்றை கற்றுக்கொண்டோம் இறுதியாக திண்பண்டத்தை இறைவன் அருளால் முழுமையாக சிறப்பாக உருவாக்கி நம் மக்களிடம் கொடுத்து கருத்து கேட்டோம். ஒருவர் மட்டுமல்லாமல் சாப்பிட்ட அனைவரும் சொன்ன ஒரே பதில் மிகவும் நன்றாக இருக்கிறது என்பது தான். நளன் தேவாமிர்தம் என்ற நூலில், இந்த திண்பண்டத்தைப் பற்றி தெரியப்படுத்திய சில அற்புதமான மற்றும் ஆச்சர்யமான தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். இத்திண்பண்டம் செய்ய தேவையான பொருட்கள் தொடர்ந்து படிக்கவும்.

அசுர வேகத்தில் ஜலதோசம் , சளி, இருமல் வராமல் தடுத்து நுண்கிருமிகளை கொல்லும் அற்புத மருந்து !

எல்லாம் வல்ல விநாயகப்பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் நன்றி தெரிவித்து இப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உருமாற்றம் அடைந்த கொரோனா வியாதியின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் பல வழிகளை கையாண்டும் முழுமையான பலன் இல்லாத நிலையில், அகத்தியர் தம் ஏட்டுக்குறிப்பில் தெரியப்படுத்தியுள்ள ஒரு மிக அற்புதமான மருந்தைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

 

ஜலதோசத்திற்கு மருந்து எடுத்தால் நான்கு நாட்களில் சரியாகும் மருந்து எடுக்காவிட்டால் ஒரு வாரத்தில் குணம் கிடைக்கும் என்று பலரும் வேடிக்கையாக கூறுவதை கேட்டிருக்கிறோம். ஜலதோசம் ஒரு மனிதனுக்கு வரப்போகிறது என்பதை சில அறிகுறிகள் வைத்து உடனடியாக கண்டுபிடிக்கலாம். திடீரென்று கண்களில் அரிப்பு எடுப்பது போல் தோன்றும் உடனடியாக கண் இமைகளை தேய்த்துவிடுவோம் அடுத்த சில நிமிடங்களில் தும்மல் விடாமல் வந்து மூக்கின் வழியாக தண்ணீரை ஒழுக விடும். இன்னும் சிலருக்கு ஜலதோசம் வருவதற்கு முன் தொண்டையில் ஒருவிதமான வலி அல்லது காந்தல் இருக்கும் அவரே சொல்லிவிடுவார் எனக்கு இப்போது ஜலதோசம் பிடிக்கப்போகிறது என்று. இலண்டன் நாட்டில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தும் , பல கோடிகள் செலவுகள் செய்தும் ஜலதோசம் ஏன் வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் இந்த சோதனையை நிறுத்தியதும் நாம் அறிந்த ஒன்றே.

ஒரு மனிதனுக்கு வரும் 4436 வியாதிகளில் இதுவும் ஒன்றும் தான் என்று சித்தர் பெருமக்கள் தங்களின் நூல்களில் தெரியப்படுத்தி உள்ளனர் ஆனால் இப்போது தொடர்ந்து படிக்கவும்.

இயற்கை உணவு உலகம் தெரியப்படுத்தும் கொரோனா பாதுகாப்பு மருந்து பாகம் 1

எல்லாம் வல்ல விநாயகப்பெருமானுக்கும், எம் குருநாதர் அகத்திய பெருமானுக்கும் எல்லையில்லாத அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நம் வலைப்பூவில் இருந்து எந்தப்பதிவும் வெளிவரவில்லை என்று பலர் இமெயில் வழியாகவும், நம் நட்பு வட்டங்கள் வழியாகவும் கேட்டிருந்தனர். மிகப்பெரிய நோய்களுக்கான மருந்தை இறைவன் அருளால் ஆய்வு செய்து வருவதால் பதிவிட நேரமில்லாமல் இருந்தது.

தற்சமயம் வேகமாக பரவி நாட்டை மட்டுமல்லாமல் உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனாவிற்கு இயற்கை வழியில் மருந்து இருக்கிறதா என்று பலபேர் கேட்டிருந்தனர். கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இதே நாளில் ( 08-05-2017) “ மூன்றே நாளில் பன்றிக்காய்ச்சல் Swine flu ( H1N1 ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி “ என்ற பதிவில் தெரியப்படுத்திய மருந்து நன்றாக வேலை செய்கிறது என்று பலபேர் தெரியப்படுத்தி இருந்தனர். சில சித்த மருத்துவர்களும் இம்மருந்தை ரகசிய மருந்தாக கொடுத்து நல்ல பலன் உள்ளதாக தெரியப்படுத்தியுள்ளனர். இந்த முகவரியில் அந்த பதிவை படிக்கலாம். https://naturalfoodworld.wordpress.com/2017/05/08/swine-flu/

ஆனால் தற்போது உருமாறிய கொரானோவின் இரண்டாவது அலை வேகம் மிகப்பெரிய அளவில் நுரையீரலை தாக்கி மூச்சுதிணறல் உண்டு பண்ணுவதோடு ஆக்சிஜன் இல்லாமல் மருத்துவமனை வாசல்களில் படுக்கைக்காக ஏங்கி கிடக்கும் அவலநிலையும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் இறப்புகளும் கணக்கில் அடங்காமல் நாள் தோறும் பெருகியவண்ணமே உள்ளது. மண்ணுயிரை தன் உயிராக எண்ண வேண்டும் என்று நம் குருநாதர் கூறிய வார்த்தையை மனதில் நிறுத்தி இதற்கான மருந்தை தேடியபோது தொடர்ந்து படிக்கவும்.

இரத்தக்குழாய் கட்டி ( Hemangioma ) குணமாகிய குழந்தையின் சிறப்பு பேட்டி !

எல்லாம் வல்ல எம் குருநாதரின் அன்பினால் இந்தப்பதிவை உங்களுக்கு காணிக்கையாக்குகிறோம். இரத்தக்குழாயில் வரும் சிகப்பு அல்லது செம்பழுப்பு நிற தோல் கட்டி பெரும்பாலும் எல்லா வயதினருக்கும் வருகிறது.

இதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணியின் 1 1/2 வயது குழந்தைக்கு இந்த இரத்தக்குழாய் கட்டி காதின் அருகில் இருக்கிறது என்றும் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய விருப்பம் இல்லை என்றும் இயற்கை மருந்து வேண்டும் என்று கேட்டு புகைப்படத்துடன் இமெயில் அனுப்பி இருந்தார். அலோபதி மருத்துவத்தில் லேசர் சிகிச்சை செய்யலாம் அல்லது ஊசி மூலம் மருந்தை அந்த கட்டிக்குள் செலுத்தியும் சிகிச்சைப் பெறலாம் என்றாலும் இதனால் வரும் அத்தனை விளைவுகளையும் கூகிளில் சென்று தேடிப்பார்த்து இந்த முறை சிகிச்சையே வேண்டாம். நம் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையில் தீர்வைத் தேடி இந்த சகோதரி கேட்டிருந்தார். இவருக்கான மருந்தை தொடர்ந்து படிக்கவும்.