அன்பே வடிவான விநாயகப்பெருமானுக்கும் நம் குருநாதருக்கும் வணக்கம் , பல் ஈறுகளில் இருந்து ரத்தம் வருகிறது , நாக்கில் புண் ஆறவே இல்லை, வாயில் வரும் அரணைக்கட்டி எல்லாவற்றிற்கும் மேலாக வாயில் வரும் கேன்சர் நோய்க்கு அருமருந்தாக இருக்கும் ஒரு அற்புத மூலிகையைப் பற்றி தான் இந்தப்பதிவு.
6 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் உள்ள நம் வலைப்பூவின் வாசகர் ஒருவர் தன் மாமியாருக்கு வாயில் கேன்சர் முற்றிய நிலையில் இருக்கிறது மருத்துவரே இவரின் வயது மற்றும் கடைசி நிலை கேன்சர் என்பதால் இதற்கு மேல் கொடுப்பதற்கு மருந்து இல்லை என்று தெரியப்படுத்தியதால் இவருக்கு ஏதேனும் மருந்து உள்ளதா என்று கேட்டிருந்தார் நாமும் வெள்ளை சொட்டு மருந்து மற்றும் சில மருந்துகளை கொடுத்தோம் ஆனால் நோயின் தாக்கம் குறைந்ததே தவிர நோய் முழுமையான குணம் கிடைக்கவில்லை. ஒருசமயம் அந்த வயதான அம்மாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது அவரால் பேசமுடியவில்லை சைகையிலே இப்போது பரவாயில்லை வலி நன்றாக குறைந்திருக்கிறது என்றும் இரண்டு கைகளையும் கூப்பி தம் நன்றியை தெரியப்படுத்தினார். சில மாதங்கள் கழித்து அவரும் இயற்கை ஏய்தினார். நம்பியவர்களுக்கு உதவாத இம்மருத்துவ சேவை இனி நமக்கு தேவையில்லை என்று சில காலம் விலகியே தொடர்ந்து படிக்கவும்.