எல்லாம் வல்ல விநாயகப்பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் நன்றி தெரிவித்து இப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உருமாற்றம் அடைந்த கொரோனா வியாதியின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் பல வழிகளை கையாண்டும் முழுமையான பலன் இல்லாத நிலையில், அகத்தியர் தம் ஏட்டுக்குறிப்பில் தெரியப்படுத்தியுள்ள ஒரு மிக அற்புதமான மருந்தைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
ஜலதோசத்திற்கு மருந்து எடுத்தால் நான்கு நாட்களில் சரியாகும் மருந்து எடுக்காவிட்டால் ஒரு வாரத்தில் குணம் கிடைக்கும் என்று பலரும் வேடிக்கையாக கூறுவதை கேட்டிருக்கிறோம். ஜலதோசம் ஒரு மனிதனுக்கு வரப்போகிறது என்பதை சில அறிகுறிகள் வைத்து உடனடியாக கண்டுபிடிக்கலாம். திடீரென்று கண்களில் அரிப்பு எடுப்பது போல் தோன்றும் உடனடியாக கண் இமைகளை தேய்த்துவிடுவோம் அடுத்த சில நிமிடங்களில் தும்மல் விடாமல் வந்து மூக்கின் வழியாக தண்ணீரை ஒழுக விடும். இன்னும் சிலருக்கு ஜலதோசம் வருவதற்கு முன் தொண்டையில் ஒருவிதமான வலி அல்லது காந்தல் இருக்கும் அவரே சொல்லிவிடுவார் எனக்கு இப்போது ஜலதோசம் பிடிக்கப்போகிறது என்று. இலண்டன் நாட்டில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தும் , பல கோடிகள் செலவுகள் செய்தும் ஜலதோசம் ஏன் வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சில ஆண்டுகளுக்கு முன் இந்த சோதனையை நிறுத்தியதும் நாம் அறிந்த ஒன்றே.
ஒரு மனிதனுக்கு வரும் 4436 வியாதிகளில் இதுவும் ஒன்றும் தான் என்று சித்தர் பெருமக்கள் தங்களின் நூல்களில் தெரியப்படுத்தி உள்ளனர் ஆனால் இப்போது Continue reading