Archive for the ‘சிறப்பு பேட்டி’ Category

இரத்தக்குழாய் கட்டி ( Hemangioma ) குணமாகிய குழந்தையின் சிறப்பு பேட்டி !

எல்லாம் வல்ல எம் குருநாதரின் அன்பினால் இந்தப்பதிவை உங்களுக்கு காணிக்கையாக்குகிறோம். இரத்தக்குழாயில் வரும் சிகப்பு அல்லது செம்பழுப்பு நிற தோல் கட்டி பெரும்பாலும் எல்லா வயதினருக்கும் வருகிறது.

இதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணியின் 1 1/2 வயது குழந்தைக்கு இந்த இரத்தக்குழாய் கட்டி காதின் அருகில் இருக்கிறது என்றும் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய விருப்பம் இல்லை என்றும் இயற்கை மருந்து வேண்டும் என்று கேட்டு புகைப்படத்துடன் இமெயில் அனுப்பி இருந்தார். அலோபதி மருத்துவத்தில் லேசர் சிகிச்சை செய்யலாம் அல்லது ஊசி மூலம் மருந்தை அந்த கட்டிக்குள் செலுத்தியும் சிகிச்சைப் பெறலாம் என்றாலும் இதனால் வரும் அத்தனை விளைவுகளையும் கூகிளில் சென்று தேடிப்பார்த்து இந்த முறை சிகிச்சையே வேண்டாம். நம் பாரம்பரிய இயற்கை மருத்துவ முறையில் தீர்வைத் தேடி இந்த சகோதரி கேட்டிருந்தார். இவருக்கான மருந்தை Continue reading

மூன்றே நாளில் பன்றிக்காய்ச்சல் Swine flu ( H1N1 ) குணமாகியவரின் சிறப்பு பேட்டி !

எல்லாம் வல்ல நம் விநாயகப்பெருமானுக்கும், குருநாதர் அகத்தியருக்கும், இயற்கை அன்னைக்கும் நம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உலகில் மிக வேகமாக பரவி வரும் ஒரு கொடிய நோயான பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து தேடி பல ஆராய்ச்சி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் முயன்று வருகிறது, ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்பெருமக்களுக்கு இதெல்லாம் வெறும் சாதாரன விசயம் தான். கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து மருந்து கண்டுபிடிக்கமுடியாத ஒரு வியாதிக்கு மூன்றே நாளில் குணமாக்கும் மருந்து இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ? ஒரு மனிதனின் உயிருக்கு சவால் விடும் நோயில் ஒன்றுதான் தான் இந்த பன்றிக்காய்ச்சல், எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாத ஒன்று உண்டு என்றால் அது நேரமும் உயிரும் தான். அப்படிப்பட்ட உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்கள் கூட பன்றிக்காய்ச்சலை கண்டு அஞ்சுவதும், இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக தான். இனி யாரும் பன்றிக்காய்ச்சலை கண்டுபயப்பட தேவையில்லை. 1 1/2 வயது குழந்தைக்கு வந்த பன்றிக்காய்ச்சல் மூன்றே நாளில் நம் இயற்கை மருந்தின் மூலம் குணம் கிடைத்துள்ளது. இந்த குழந்தையின் தாய் ஒரு பிசியோதெரபி மருத்துவர். முதலில் குழந்தையின் தந்தை கூறும் அனுபவத்தை பார்ப்போம். Continue reading

மூளையில் கேன்சர் கட்டி ( Brain Tumor ) இயற்கை மருந்து எடுத்த நபரின் சிறப்பு பேட்டி !

இப்பதிவை தொடங்கும் முன் எல்லாம் வல்ல எம் குருநாதர் அகத்தியம் பெருமானுக்கும் விநாயகப்பெருமானுக்கும், நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம். அலோபதி மருத்துவத்தால் முடியாத எத்தனையோ விடயங்களை சித்தர்களின் மருத்துவம் சாதாரணமாக குணப்படுத்தும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு, கேன்சர் மூளைக்கட்டியால் மருத்துவரால் இதற்கு மேல் மருத்துவம் கிடையாது என்று சொல்லி  அனுப்பிய ஒரு நபருக்கு இயற்கை மருத்துவம் கொடுத்த புதிய  வாழ்க்கையைப்பற்றி தான்.

Brain Tumors

கடந்த ( 2014 ) -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருக்கும் ஒரு  நபருக்கு மூளையில் கேன்சர் கட்டி இருக்கிறது என்றும் இவரைப்பற்றிய  முழுவிபரங்கள் மற்றும் மெடிக்கல் ரிப்போர்ட் என அனைத்தும் அனுப்பி இருந்தார் இவரின் மைத்துனர், இவரை சோதித்த அலோபதி மருத்துவர்கள்  ஹீமோ, ரேடியோ தெரபி என அனைத்தும் செய்து முடித்து விட்டு எங்களால்  உதவ முடியவில்லை கேன்சர் செல்கள் அதிவேகமாக பரவுகிறது என்று  கூறியதோடு ஒன்றிரண்டு மாதங்கள் தான் இருப்பார் என்று சொல்லி  கேன்சருக்கான பிரேத்யேக தூக்க மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டனர்.  ரேடியோ ஹீமோ என அனைத்து சிகிச்சைகள் எடுத்தும் இவரின் தலைவலியைக் கூட குறைக்க முடியவில்லை இந்த நிலையில் தான் நம்மிடம் தொடர்பு கொண்டார், Continue reading

சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க – இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் வாரீர்.

இயற்கை அன்னைக்கும், எல்லாம் வல்ல எம் குருநாதருக்கும் நன்றி. சரியாக 5 மாதத்திற்கு பின் இந்தப்பதிவு நம் தளத்தில் இருந்து வெளிவருகிறது. லட்சகணக்கான இமெயில்கள் அத்தனைக்கும் பதில் அனுப்புவதற்கு சில மாதங்கள் கூட எடுத்துக்கொண்டது,  மீதமுள்ள சில நூறு இமெயில்களுக்கும் இறைவன் அருளால் விரைவில் பதில் அனுப்புகிறோம். நம் தளத்திலே மருந்தை  தெரிவிக்கலாமே என்று பல பேர் கேள்வி கேட்கின்றனர், நம் சித்தர்களின் பாடலில் தேடி வந்து கேட்பவர்களுக்கு மட்டும் மருந்து கொடு என்று இருக்கிறது, அதனால் தான் இமெயில் மூலம் கேட்க சொல்லி மருந்து அனுப்புகிறோம், நமக்கு வரும் பல இமெயில்களில் ஒரே வரியில் கேள்வி கேட்பதை பலர் வாடிக்கையாக  கொண்டுள்ளனர், நோயாளியின் பெயர் , வயது , அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியாமல் எப்படி மருந்து கொடுப்பது ? இந்த காரணத்தினால் பல இமெயில்களுக்கு பதில் அனுப்ப இயலாமல் போனது.

nature

9 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு பெண்மணி (வயது 70) தன் நோய்க்காக மருந்து கேட்டு இருந்தார், ஒரு அரிய வகை நோய் தான், சித்தர்களின் பாடலில் எளிமையான மருந்து இருந்தது உடனடியாக அதை அப்படியே அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதற்கு அந்த அம்மா இங்கு நீங்கள் தெரியப்படுத்திய மூலிகைகள் ஏதும் இல்லை என்று கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்தினால் Continue reading

சுகர் மருந்து தொடர்பான வாசகர்களின் சில கேள்விகளும் அதற்கான பதிலும்.

இயற்கை உணவு உலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்ட சுகர்மருந்து சாப்பிட்டு இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் நல்ல பயன்அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக நமக்கு இமெயிலில் வரும் சில அடிப்படையான கேள்விகள் பற்றி பார்ப்போம்.

கேள்வி : சுகர் மருந்து கேட்டு இமெயில் அனுப்பி பல நாட்கள் ஆகிறது இன்னும் மருந்து பற்றிய இமெயில் கிடைக்கவில்லை எப்போது கிடைக்கும் ?

பதில் : நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தான் பதில் அனுப்ப முடிகிறது. முடிந்தவரை வேகமாக பதில் அனுப்ப முயற்சிக்கிறோம். தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நேரங்களில் பதில் அனுப்ப சில வாரங்கள் அல்லது 1 மாதம் கூட ஆகும். தாமதம் ஆனாலும் கண்டிப்பாக  உங்கள் இமெயிலுக்கு சுகர் மருந்து வந்து சேரும்.

கே : சுகர் மருந்து எடுத்து சுகரின் அளவு குறைந்துவிட்டது தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டுமா ? மொத்தமாக எவ்வளவு நாள் சுகர் மருந்து எடுக்க வேண்டும் ? Continue reading